Published : 17 Jan 2022 08:36 AM
Last Updated : 17 Jan 2022 08:36 AM

திருச்சி மாவட்டத்தில் சம்பா நெற்பயிர் அறுவடை தொடங்கியது: முழு ஊரடங்கிலும் பணியில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்கள்

திருச்சி குமார வயலூர் பகுதியில் நேற்று சம்பா நெல் அறுவடைப் பணியில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்கள்.படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடைப் பணிகள் தொடங்கி உள்ளன. இதையடுத்து, முழு ஊரடங்கு நாளான நேற்றும் குமார வயலூர் பகுதியில் உள்ள வயல்களில் விவசாயத் தொழிலாளர்கள் நெல் அறுவடைப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் 1.07 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் மணிகள் அறுவடைக்குத் தயாராக இருப்பதால், பொங்க லுக்குப் பிறகு அறுவடைப் பணிகள் தீவிரமாகும் என்று கூறி, மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே செயல்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங் களையும், தேவையான இடங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களையும் மாவட்ட நிர்வாகம் திறக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.

அந்த வகையில் பொங்கல், மாட்டுப்பொங்கல் முடிவடைந்த நிலையில், நேற்று சம்பா நெல் அறுவடை தொடங்கியது.

முழுநேர ஊரடங்கு நாளான நேற்று குமார வயலூர் பகுதியில் சம்பா நெல் அறுவடைப் பணியில் விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியது:

“நிகழாண்டு குறித்த நேரத்தில் அணையில் தண்ணீர் திறக்கப்பட் டதுடன், நல்ல மழையும் பெய்த தால் நல்ல முறையில் சம்பா நெல் விளைச்சல் கிடைத்துள்ளது. குழுவாக சேர்ந்து அறுவடைப் பணியில் ஈடுபடும் எங்களுக்கு ஏக்கருக்கு 5 மூட்டை நெல் வீதம் ஊதியம் கிடைக்கும்.

நிகழாண்டு தை முதல் மாசி வரையிலான ஒரு மாதம் முழுவதும் அறுவடைப் பணிகள் இருக்கும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x