Published : 04 Apr 2016 08:19 AM
Last Updated : 04 Apr 2016 08:19 AM

வைகோவுக்கு தா.பாண்டியன் கோரிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் திருச்சியில் நிருபர்களிடம் நேற்று கூறியது: கருத்துக் கணிப்பு என்பது ஜோதிடம் போன்றது. நான் ஜோதிடத்தை நம்புவதில்லை. மக்க ளைப் பாதிக்கும் சிக்கல்களைத் தீர்க்கும் செயல்திறன் மிக்கவர் யார் என்று மதிப்பிட்டு, அவரையே மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமெனில், மத்திய அரசில் அதிகாரம் இருக்க வேண்டும். சிறுதாவூர் பங்களாவுக்கு கன்டெய்னர்களில் பணத்தை கொண்டு சென்றதை கண்டுபிடித்திருந் தால், தயவுசெய்து அதில் ஒரு கட்டை எடுத்து, எங்கள் கட்சி அலுவலகத்தில் தேர்தல் நன்கொடையாகக் கொடுத்து ரசீது வாங்கிக் கொள்ளுங்கள். இந்தப் புகாரைச் சொன்னவர், பணத்தைப் பிடித்துக் கொடுக்க வேண்டுமல்லவா? என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x