ஜனவரி 31-ம் தேதிவரை 10, 11, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை; தேர்வுகள் தள்ளிவைப்பு

ஜனவரி 31-ம் தேதிவரை 10, 11, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை; தேர்வுகள் தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: கரோனா அதிகரித்து வருவதால் வரும் 31 ஆம் தேதிவரை அனைத்து வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறுவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ கரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 23,989 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 29,15,948. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 6,34,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,47,974 .

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in