Published : 21 Apr 2016 09:16 AM
Last Updated : 21 Apr 2016 09:16 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக் கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தலைமையில் 18 பேர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இதுவரை 28 கூட்டங்களை நடத்தி தேர்தல் அறிக்கையை இறுதி செய்துள்ளனர். பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படு கிறது. சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தேர்தல் அறிக் கையை வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சி யில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT