Published : 12 Apr 2016 08:32 AM
Last Updated : 12 Apr 2016 08:32 AM

தமாகாவில் இருந்து விலகலா? - சேலம் மாவட்ட தலைவர் விளக்கம்

காங்கிரஸில் இருந்து என்னை யாரும் அழைக்கவில்லை. அவர்கள் அழைத்தாலும் நான் அங்கு செல்லப்போவதுமில்லை என சேலம் மத்திய மாவட்ட தமாகா தலைவர் தேவதாஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது சம்பந்தமாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எடுக்கும் முடிவுக்கு அனைத்து நிர்வாகிகளும் கட்டுப்படுவதாக பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமாகாவில் இருந்து நான் விலகி, காங்கிரஸ் கட்சிக்கு செல்லும் முடிவில் இருப்பதாக கூறுவது சரியல்ல. காங்கிரஸ் கட்சியில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை. அழைத்தாலும் நான் காங்கிரஸுக்கு செல்லப்போவதில்லை சேலம் மாவட்டத்தில் அனைத்து தமாகா நிர்வாகிகளும் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததற்கு ஆதரவு தெரிவித்துள்னர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x