Published : 13 Jan 2022 11:04 AM
Last Updated : 13 Jan 2022 11:04 AM

கடந்த 6 மாத என்.ஆர்.காங் - பாஜக ஆட்சியில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தராதது ஏன்?: காங்கிரஸ் போராட்டத்தில் நாராயணசாமி ஆவேச கேள்வி

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரி காந்திநகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் முன் இளைஞர் காங்கிரஸார் கருப்பு அங்கி அணிந்து நடுரோட்டில் அமர்ந்து பஜ்ஜி விற்றும், ஷூ பாலிஷ் தேய்த்தும் நூதன போராட் டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணபாரதி தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங் கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ,இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் லட்சுமிகாந்தன் மற்றும் பெண்கள், பட்டதாரி இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துபதாகைகளை ஏந்தி கோஷ மிட்டனர்.

இதில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகை யில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் படித்த பட்டதாரிகளுக்கு கடந்த6 மாதமாக என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

‘ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்துக் குள் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவோம்’ என தேர்தல் நேரத்தில் ரங்கசாமி வாக்குறுதி அளித்தார். பிரதமரும், உள்துறை அமைச்சரும் ‘புதுச்சேரியில் வேலைவாய்ப்பை உருவாக்குவோம்’ எனக் கூறினர். ஆனால் இதுவரை பணியிடங்களை நிரப்பவில்லை.

‘பணியிடங்களை நிரப்ப எங்களிடம் நிதியில்லை’ என பாஜக அமைச்சர்கள் இப்போது கூறுகின்றனர். ‘மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் பணியிடங்களை நிரப்பு முடியும்’ என முதல்வர் கூறுகிறார். இப்படி கூறுபவர்கள் ஏன்? தேர்தல் சமயத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்தார்கள்.

புதுச்சேரியில் 24 சதவீதம் படித்த பட்டதாரிகள் வேலையின்றி உள்ளனர். மத்திய மோடி அரசு 2014-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில், ‘ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை கொடுப்போம்’ எனக் கூறியது. இப்படிச் சொல்லி 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. 14 கோடி பேருக்கு வேலை அளித்திருக்க வேண்டும். ஆனால், கரோனா வந்த பிறகு 24 கோடி பேர் வேலையின்றி நாட்டில் உள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா, அங்கன்வாடி பணியாளர் கள், ஆசிரியர்கள், காவல்துறை, கூட்டுறவு துறையில் ஆட்களை நியமித்தோம். பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம், தொழில் முளைவோர் ஆராய்ச்சி மையம் நாங்கள் கட்டி முடித்தது. இவர்கள் ஒன்றும் புதிதாக கட்டவில்லை.

அரிசிக்காக ஒதுக்கும் பணத்தை தான் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணமாக முதல்வர் கொடுத்தார். புதிதாக மத்திய அரசு எந்த நிவாரண நிதியையும் தரவில்லை. மாநில அந்தஸ்து வழங்கவில்லை. கடனை தள்ளுபடி செய்யவில்லை.

அதிகாரத்தை ஆளுநரிடம்கொடுத்து விட்டு வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிறார் முதல்வர். தெலங்கானாவுக் குத்தான் முழுநேர ஆளுநர், புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநர். ஆனால் ஆளுநர் புதுச்சேரியிலேயே எப்போதும் உட்காந்திருக்கிறார். ஏனென்றால் அதிகாரத்தை செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான். முதல்வரை டம்மியாக்கி விட்டார்கள்.

ஆளுநரை எதிர்த்து எதற்காக நாங்கள் போராடினாமோ, அதனை ரங்கசாமி வீணடித்து விட்டார். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடக்கவில்லை, ஆளுநரின் அரசு தான் நடக்கிறது.

பாஜகவினர் சடுகுடு விளையாடுகிறார்கள்! சடுகுடு விளையாடும் நேரமா இது!” என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x