Published : 12 Jan 2022 12:21 PM
Last Updated : 12 Jan 2022 12:21 PM

திட்டமிட்டபடி 10, 12-ம் வகுப்புக்கு திருப்புதல் தேர்வு

சென்னை: 10, 12-ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘அரசின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, 10, 12-ம் வகுப்புமாணவர்களுக்கு தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெறும்.

அதேபோல, பொதுத்தேர்வைக் கருத்தில்கொண்டு திட்டமிட்டபடி மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜன.19-ம்தேதி தொடங்கும். தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் பணிகளை பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றன. பிளஸ் 1பொதுத்தேர்வை ரத்துசெய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். எனினும், 10, 12-ம்வகுப்புகளுக்கு நிச்சயம் பொதுத்தேர்வு நடைபெறும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x