Published : 03 Apr 2016 09:51 AM
Last Updated : 03 Apr 2016 09:51 AM
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கன்னியாகுமரியில் கூறும்போது, ‘தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி வேட்பாளர்களை களம் இறக்கும். வரும் 29-ம் தேதி இந்துத்துவ அரசியல் புரட்சி பயணம் சென்னை காளிகாம்பாள் கோயிலில் இருந்து தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் இப்பயணம் நடைபெறும்.
இந்து மக்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட இதுவரை 567 பேர் விருப்ப மனு செய்துள்ளனர். இவற்றில் 127 பேரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளோம். பாஜக சார்பில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் எம்.ஆர்.காந்தி போன்ற, மக்களை கவர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. அவர்கள் எங்களிடம் ஆதரவு கேட்டால் வெற்றிக்காக பாடுபடுவதுடன், எங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெறுவோம்’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT