Published : 26 Apr 2016 09:23 AM
Last Updated : 26 Apr 2016 09:23 AM

விஜயகாந்தை எதிர்த்து பத்மராஜன் மனு

உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேர்தல் மன்னன் பத்மராஜன் நேற்று 174-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந் தூர்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடந்த 22-ம் தேதி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வெங்க டேசன் வேட்புமனு தாக்கல் செய் தார். மற்ற முன்னணி கட்சியினர் யாரும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

மேட்டூரைச் சேர்ந்த தேர் தல் மன்னன் பத்மராஜன் கடந்த 22-ம் தேதி மேட்டூர் தொகுதி யில் வேட்புமனு தாக்கல் செய் திருந்தார். விஜயகாந்த் போட்டி யிடும் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுவதற்காக நேற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இது அவரது 174-வது வேட்பு மனுவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x