Published : 09 Apr 2016 09:04 AM
Last Updated : 09 Apr 2016 09:04 AM

சுயேச்சையாக போட்டி: காங். ஜோதிமணி அறிவிப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தென்னிலை அருகேயுள்ள பெரியதிருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி.

இவர், எந்தக் கட்சியுடனும் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்காத நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பே தன் சொந்த தொகுதி என்பதால் அரவக்குறிச்சியில் காங்கிரஸ் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

அதன்பின், காங்கிரஸ்- திமுக இடையே தேர்தல் கூட்டணி ஏற்பட்டது. இந்நிலையில், திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு கரூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதுகுறித்து, ஜோதிமணி கூறியபோது, “காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அரவக்குறிச்சி தொகுதியைப் பெறுவதற்காக போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை. தேவைப்பட்டால், அரவக்குறிச்சி தொகுதியில் நான் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x