Published : 18 Apr 2016 07:59 AM
Last Updated : 18 Apr 2016 07:59 AM
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச் சாரம் செய்ய உள்ளதாக ரஜினி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை நடிகர் ரஜினி காந்த் அறிவிக்கவில்லை. இந்நிலை யில், திருச்சி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் கர்ணன் தலைமையில், மாவட்ட ஆலோசகர் அபூர்வா மணி, மாவட்ட அமைப்பாளர் ராயல் ராஜி உட்பட 100-க்கும் மேற்பட்டோர், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவை நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக் காக பிரச்சாரம் செய்யவுள்ளதாக வும் அவர்கள் உறுதியளித்தனர்.
பின்னர், மன்றத் தலைவர் கர்ணன் செய்தியாளர்களிடம் கூறும் போது, “ரசிகர்கள் தங்களது விருப் பப்படி யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என ரஜினி ஏற்கெனவே தெரிவித்துள்ளார். எனவே, திருச்சி மாவட்டத்தில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
மதுவிலக்கு, கல்வி மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற, மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய திட்டங்களை திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.
ரஜினியுடன் ஒப்பிட்டுப் பேசி, தனது இமேஜை உயர்த்திக் கொள்ளும்போக்கை விஜயகாந்த் நிறுத்திக்கொள்ள வேண்டும். முதல்வர் ஜெயலலிதா திரைப்படத் துறையைச் சார்ந்தவராக இருந்த போதிலும், கடந்த 5 ஆண்டுகளில் திரைத் துறையை பல வகை களில் வஞ்சித்துள்ளார். குசேலன், விஸ்வரூபம், தலைவா உள்ளிட்ட படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டபோது, அவற் றைத் தீர்க்க உடனடியாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.
ஆனால், எல்லா கால கட்டத்திலும் திரைத்துறைக்கு திமுக உறுதுணையாக இருந் துள்ளது. எனவே இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT