Published : 09 Jan 2022 08:44 AM
Last Updated : 09 Jan 2022 08:44 AM

மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் 163 குழந்தைகளுக்கு செவித்திறன்

செவித் திறன் பெற்று பாடல் பாடிய குழந்தைகளுடன் டீன் ரெத்தினவேலு மற்றும் மருத்துவர்கள்.

மதுரை

பிறவியிலேயே செவித்திறனற்ற 163 குழந்தைகள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் செவித் திறன் பெற்றனர்.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரெத்தினவேலு கூறியதாவது:

பிறவியிலேயே செவித்திறன் இல்லாத 163 குழந்தைகளுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனை காது, மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு மூலமாக முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து செவித்திறன் கிடைக்கச் செய்துள்ளோம்.

குழந்தைகளுக்கு காது கேட் கும் கருவி, உரிய பயிற்று நர்கள் மூலமாகப் பேச்சுப் பயிற்சிகளை வழங்கி பேச்சுத் திறன்பெற வைத்துள்ளோம். இதன் மூலம் ரூ.10 கோடியே ’72 லட்சம் காப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 550படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஆக்சிஜன் குறைபாடு உள்ளவர்களை மட்டும் மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு தனியாக 100 படுக்கையுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் கரோனா தடுப் பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் செவித் திறன் பெற்ற சிறுவர்கள் டீன் ரெத்தினவேலு மற்றும் மருத்துவர்கள் முன்னிலை யில் பாடல் பாடி அசத்தினர். அப் போது காது, மூக்கு, தொண்டை மருத்துவப் பிரிவு தலைவர் தினகரன் மற்றும் மருத்துவக் குழு வினர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x