Published : 20 Apr 2016 08:02 AM
Last Updated : 20 Apr 2016 08:02 AM

எம்.எல். சட்ட பருவமுறை தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.22 கடைசி நாள்: அம்பேத்கர் பல்கலை. அறிவிப்பு

மே மாதம் நடக்கவுள்ள எம்.எல். சட்ட பருவமுறை தேர்வுக்கு அபராதமின்றி விண்ணப்பிக்க ஏப்ரல் 22-ம் தேதி கடைசி நாள் என சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அப்பல் கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டக் கல்லூரி முதுநிலை படிப்பு களுக்கான இயக்குநர் டி.கோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ சிபிசிஎஸ் பாடத்திட்டத்தின்படி எம்.எல். அல்லது எல்எல்எம் சட்ட மேற்படிப்பிற்கான பருவமுறை தேர்வுகள் வரும் மே 2-ம் தேதி தொடங்கி மே 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இத்தேர்வை கடந்த 2012 2016 வரையிலான காலகட்டத்தில் எம்.எல். முதுநிலை சட்டப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் எழுதலாம். இத்தேர்வுக்கு அபராதமின்றி விண்ணப்பிக்க ஏப்ரல் 22-ம் தேதி கடைசி நாள். அபராதத்துடன் விண்ணப்பிக்க ஏப்ரல் 29-ம் தேதி கடைசி நாள் என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x