Published : 24 Apr 2016 10:22 AM
Last Updated : 24 Apr 2016 10:22 AM

ரூ.5 கோடி பணம் பறிமுதலில் உண்மை மறைக்கப்படுகிறது: வைகோ குற்றச்சாட்டு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டி யிடும் க.சந்திரசேகரனை ஆதரித்து கீரமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியது:

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தால், அவர் மீண்டும் சிறை செல்வது உறுதி. கரூரில் அமைச்சர் நத்தம் விசுவநாதனின் ஆதரவாளருக்கு சொந்தமான குடோனில் ரூ.5 கோடி உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால், அங்கு, சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்டோர் ரூ.10 லட்சம் மட்டும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் உண்மை மறைக்கப்படுகிறது.

இந்த தேர்தலில் பணம் பட்டா வாடாவை தடுத்தாக வேண்டும். புதிய வாக்காளர்கள் சுமார் ஒன்றரை கோடி இளைஞர்கள் உள்ளனர். இவர்களனை வரும் செல்போன் பயன்படுத்தி வருகின் றனர். இவர்கள், வாக்குக்கு பணம், பொருட்களை வாங்கக்கூடாதென்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாரேனும் வாக்குக்கு பணம் கொடுத்தால், செல்போன் சிங்கங்களான இந்த இளைஞர்கள் தடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, அறந்தாங்கியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லோகநாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x