Last Updated : 07 Jan, 2022 04:13 PM

 

Published : 07 Jan 2022 04:13 PM
Last Updated : 07 Jan 2022 04:13 PM

புதுச்சேரியில் புதிதாக 177 பேருக்கு கரோனா தொற்று உறுதி

பிரதிநிதித்துவப் படம்.

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 177 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பேறுவோரின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியுள்ளது.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (ஜன.7) வெளியிட்டுள்ள தகவலில், ''புதுச்சேரி மாநிலத்தில் 3,367 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரியில் 129 பேர், காரைக்காலில் 41 பேர், மாஹேவில் 7 பேர் என மொத்தம் 177 பேருக்கு (5.26 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 998 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 92 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 470 பேரும் என மொத்தமாக 562 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதன்படி மீண்டும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியிருக்கிறது.

மேலும் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,881 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் இருக்கிறது. புதிதாக 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 555 (98.12 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 14 லட்சத்து 37 ஆயிரத்து 971 (2 தவணைகள் உட்பட) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன'' என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x