Published : 03 Apr 2016 09:28 AM
Last Updated : 03 Apr 2016 09:28 AM

உடுமலை சங்கர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.

திருப்பூர் மாவட்டம், உடு மலை குமரலிங்கத்தைச் சேர்ந்த வர் சங்கர். இவர், பழநியைச் சேர்ந்த கவுசல்யாவை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். இதனால் கடந்த மே 13 ம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே சங்கர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக, கவுசல்யாவின் தந்தை நிலக் கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். திண்டுக்கல் பகுதியில் மேலும் சிலரை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த மார்ச் 29-ம் தேதி கவுசல்யாவின்தாய் அன்ன லட்சுமி தேனி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில், திண்டுக்கல் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த கலை என்ற தமிழ் வாணன் (29) என்பவர், நிலக் கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி ரிசானாபர்வீன் முன்னிலையில் நேற்று சரணடைந்தார்.

இவரை ஏப்ரல் 9-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x