Published : 15 Apr 2016 12:40 PM
Last Updated : 15 Apr 2016 12:40 PM
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வெங்கடேசன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை தமாகவில் இணைந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் வாசன் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. தேர்தல் நெருங்குவதால் அதிமுக, திமுகவுக்கு மாற்று அணியான மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தோம். கடைசி நேரத்தில் சேர்ந்ததால் 26 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. தொடக்கத்திலேயே இணைந்திருந்தால் அதிக தொகுதிகள் கிடைத்திருக்கும்.
தமாகாவில் இருந்து ஒரு சிலர் தங்கள் சுயநலத்துக்காக வெளியேறி உள்ளனர். பேராசை பெரும் நஷ்டம் என்பதை அவர்கள் உணர்வார்கள். தமாகா சிறுபான்மை பிரிவு தலைவர் மட்டுமே காங்கிரஸில் இணைந்துள்ளார். சிறுபான்மை பிரிவில் 99.9 சதவீத நிர்வாகிகள் தமாகாவிலேயே உள்ளனர். காங்கிரஸில் இணைந்த நிர்வாகிகளுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று ஊழலற்ற ஆட்சி அமைக்கும்.
இந்தத் தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை. தமாகா மற்றும் கூட்டணி வேட் பாளர்களுக்காக வரும் 20-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். தமாகா தேர்தல் அறிக்கை வரும் 21 அல்லது 22-ம் தேதி வெளியிடப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT