Published : 30 Mar 2016 08:13 AM
Last Updated : 30 Mar 2016 08:13 AM
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதா இல்லத்தில் நேர்காணல் நடந்து வருகிறது. 9-ம் நாளான நேற்று திருச்சி, பெரம் பலூர் மாவட்டங்களில் விடுபட்ட தொகுதிகளைச் சேர்ந்தவர்களும் கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களும் பங்கேற்ற னர். காலையில் திருச்சி, பெரம் பலூர், திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் அழைக் கப்பட்டனர்.
பிற்பகல் 1.30 மணி வரை நேர்காணல் நடந்தது. தொடர்ந்து பிற்பகலில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்களில் ஈரோடு மாவட்ட தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்த சிலரை தவிர மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்று நடக்கும் நேர்காணலில் பங்கேற்பர் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
விடுபட்ட மாவட்டங்களில் அழைக்கப்படாத பலரும் தங்க ளுக்கும் வாய்ப்பு கிடைக்காதா என எதிர்பார்த்து போயஸ் தோட் டத்தில் காத்திருக்கின்றனர்.
தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் தங்களைப் பற்றிய விவரங்களுடன், கடந்த 9 நாட்களாக போயஸ் தோட்ட சாலையில் முதல்வரின் அழைப்பு வருமா என காத்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT