Published : 05 Jan 2022 10:14 AM
Last Updated : 05 Jan 2022 10:14 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஜன.12-ம் தேதி தேசிய இளையோர் தினவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி வருகை குறித்துதுணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது: நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து 7 ஆயிரத்து 500 இளைஞர்கள் பங்கேற்கும் தேசிய இளைஞர் விழா வரும் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை புதுவையில் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.
இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி புதுச்சேரிக்கு வரும் 12-ம் தேதி வருகிறார். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
தேசிய இளைஞர் விழா புதுவையில் நடப்பது நமக்கு கிடைத்த பெருமையாகும். விழாவில் பங்கேற்போர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதனால் 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே தொடக்க நிகழ்வில் அனுமதிக்கப்படுவர். பாதுகாப்பான முறையில் விழா நடைபெறும். புதுச்சேரிக்கு வரும் பிரதமர் அரவிந்தர் - அன்னை ஆசிரமம் செல்வார். விழா மேடையில் இருந்து காணொலி வாயிலாக காமராஜர் மணி மண்டபத்தை திறக்கிறார். கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி விழா நடக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT