Published : 05 Jan 2022 10:14 AM
Last Updated : 05 Jan 2022 10:14 AM

புதுச்சேரிக்கு ஜன.12-ம் தேதி பிரதமர் வருகை: தேசிய இளையோர் தின விழாவை தொடங்கி வைக்கிறார்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜன.12-ம் தேதி தேசிய இளையோர் தினவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி வருகை குறித்துதுணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது: நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து 7 ஆயிரத்து 500 இளைஞர்கள் பங்கேற்கும் தேசிய இளைஞர் விழா வரும் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை புதுவையில் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.

இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி புதுச்சேரிக்கு வரும் 12-ம் தேதி வருகிறார். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

தேசிய இளைஞர் விழா புதுவையில் நடப்பது நமக்கு கிடைத்த பெருமையாகும். விழாவில் பங்கேற்போர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதனால் 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே தொடக்க நிகழ்வில் அனுமதிக்கப்படுவர். பாதுகாப்பான முறையில் விழா நடைபெறும். புதுச்சேரிக்கு வரும் பிரதமர் அரவிந்தர் - அன்னை ஆசிரமம் செல்வார். விழா மேடையில் இருந்து காணொலி வாயிலாக காமராஜர் மணி மண்டபத்தை திறக்கிறார். கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி விழா நடக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x