Published : 05 Jan 2022 03:47 PM
Last Updated : 05 Jan 2022 03:47 PM

விழுப்புரம், கோத்தகிரி மண்டலங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்:

சென்னை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் விழுப்புரம் மற்றும் கோத்தகிரி மண்டலங்கள் மற்றும் பல்கலைக்கழக சமுதாய கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களையும் மற்றும் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடத்தையும் நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 3-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களை கருத்தில்கொண்டு கடைசி நாள் ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கே.ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x