முழு கரும்பு, 20 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்: முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

முழு கரும்பு, 20 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்: முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(ஜன. 4) தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி, 2022-ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி,திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை ஆகியவை 2 கோடியே 15 லட்சத்து 48,060 குடும்பங்களுக்கு, ரூ.1,088 கோடி செலவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் தொகுப்பு பைகளைரேஷன் கடைகளுக்கு அனுப்பும்பணிகள் நடைபெற்று வருகின்றன.முழுக் கரும்பும் வரவழைக்கப்படுகிறது.

இந்நிலையில், பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நாளைதொடங்கிவைக்கிறார். அன்றையதினமே ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in