Published : 17 Mar 2016 01:02 PM
Last Updated : 17 Mar 2016 01:02 PM
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உறுதியாக தண்டனை பெறப்போகிறார் என கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ராமதாஸ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பாமக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டங்களில் ராமதாஸ் பேசி வருகிறார். நேற்று ஓசூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ராமதாஸ் முன்னதாக செய்தியாளர்கள் கூறியது:
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனு வேகம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் அவர் தண்டனைக்கு உள்ளாவது உறுதி. கோடை காலம் தொடங்கும் முன்பே தமிழகத்தில் மின்வெட்டு தொடங்கி விட்டது. இதனால் பொதுத் தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவியர் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சிறு, குறு தொழிற்சாலைகளும் பாதிப்படைந்துள்ளது. இந்தியா விடுதலை பெற்று 69 ஆண்டுகள் ஆன பிறகும் கூட தமிழகத்தின் மின் தேவை பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது அவலம்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தகவல் தொழில் நுட்ப மையம் தற்போது மைசூர் பகுதிக்கு செல்ல இருப்பதாக தெரிகிறது. எனவே வேலை வாய்ப்புகள் பெருகும் வகையில் ஓசூர் பகுதியில் தகவல் தொழில்நுட்ப மையத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வட மாநில உயர்நீதி மன்றங்களில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருப்பது போன்று தமிழக உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும். பாமக ஆட்சிக்கு வந்ததும் கிருஷ்ணகிரியில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT