

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை குறையத் தொடங்கியது. கிலோ ரூ.80 வரை விற்கப்பட்டு வந்த கத்தரிக்காய் நேற்று கிலோ ரூ.20 ஆக குறைந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம்தமிழகத்தில் பெய்த கன மழைகாரணமாக கோயம்பேடுசந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. மொத்தவிலையில் தக்காளி கிலோ ரூ.110, கத்தரிக்காய், பீன்ஸ்தலா ரூ.80, முருங்கைக்காய் ரூ.160 என விற்கப்பட்டன.
பெரும்பாலான காய்கறிகளின் விலை கிலோ ரூ.60-க்கு மேல் விற்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சந்தையில் காய்கறிகளின் விலை குறையத் தொடங்கியது.
நேற்றைய நிலவரப்படி,பீன்ஸ் ரூ.35, பீட்ரூட், கேரட், தக்காளி, வெண்டைக்காய் தலா ரூ.50, பாகற்காய், புடலங்காய் தலா ரூ.25, கத்தரிக்காய், வெங்காயம், நூக்கல், முள்ளங்கி, உருளைக்கிழங்கு தலாரூ.20 முட்டைக்கோஸ் ரூ.30, முருங்கைக்காய் ரூ.120,சாம்பார் வெங்காயம், அவரைக்காய் தலா ரூ.40 என விற்கப்பட்டு வருகின்றன.
பொங்கலுக்கு பிறகு..
இது தொடர்பாக கோயம்பேடு சந்தை மொத்த வியாபாரிகள் கூறும் போது, "தற்போதுகாய்கறிவரத்து அதிகரித்துள்ளது.அதன் காரணமாக காய்கறிகளின்விலை குறையத் தொடங்கியுள்ளது. பொங்கலுக்குப் பிறகு காய்கறிகளின் விலை இன்னும் குறையலாம்" என்றனர்.