Published : 31 Dec 2021 10:10 AM
Last Updated : 31 Dec 2021 10:10 AM

டெங்கு காய்ச்சல் பாதித்த மனைவி, குழந்தைகளை அரசு மருத்துவமனையில் அனுமதித்த கோவை நீதிபதி: சிகிச்சையளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றவளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தின் (டான்பிட்) சிறப்பு நீதிபதியாக பணியாற்று பவர் ஏ.எஸ்.ரவி. இவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மூவரும் கடந்த 16-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகும் அனைவரும் கடந்த 23-ம் தேதி நலமுடன் வீடு திரும்பினர்.

இதையடுத்து, சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து அரசு மருத்துவமனையின் டீனுக்கு நீதிபதி ஏ.எஸ்.ரவி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எனது குடும்ப உறுப்பினர்களை கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் ஏதேனும் ஒன்றில்அனுமதிக்குமாறு பலரும் அறிவுறுத்தினர். அங்கு செலவாகும் முழுதொகையையும் திரும்பப்பெற்றுக் கொள்ள எனக்கு வழிவகை இருந் தும், அரசு மருத்துவமனையில் அவர்களை அனுமதிப்பதில் உறுதியாக இருந்தேன். ஏனெனில், இங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பு, சேவை குறித்து அறிவேன். எனது 21 ஆண்டுகால பணிக்காலத்தில், சிகிச்சைக்காக எப்போதும் அரசு மருத்துவ மனைகளையே நாடியுள்ளேன். எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு,கடந்த 2020 நவம்பரில் உங்கள் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்றேன்.

டாக்டர்கள் பொன்முடிச்செல் வன், மதுவந்தி, பாபு, ஜெயலட் சுமி, சீனிவாசன், விமலா தியாகராஜன், பிரகாஷ்ராஜ், பிரியங்கா, பிரவீன் ஆர்யா மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மற்றமருத்துவர்கள் எனது குடும்பத்தினரை சிறப்பாக கவனித்துக் கொண்டனர். அங்கு கிடைத்த சிகிச்சைக்குமட்டுமல்ல, அவர்களின் நேர்மறையான ஆலோசனை, ஊக்குவிப்பு,அன்பு ஆகியவற்றுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். எனதுமனைவி, மகள் ஆகியோர் மோசமான நிலையில் இருந்தபோதும் மருத்துவர்கள் அச்சுறுத்தவோ, பதற்றமடையச் செய்யவோ இல்லை. இதுதவிர, தீவிர சிகிச்சைபிரிவில் இரவும், பகலும் பணியாற்றிய செவிலியர் மீனா, செவிலிய மாணவிகள் சோனா, சவுமியா,இதர செவிலியர்களுக்கும், தூய்மைப்பணியாளர்களுக்கும் நன்றி. மனிதனுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு ஆற்றும் சேவை. அவர்களின் சேவையில் கடவுளை காண்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x