Published : 30 Dec 2021 06:14 AM
Last Updated : 30 Dec 2021 06:14 AM

சிபிஐ இணை இயக்குநராக வித்யா குல்கர்னி நியமனம்

சென்னை மண்டல சிபிஐ இணை இயக்குநராக வித்யா குல்கர்னியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகக் காவல் துறையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஐஜியாகப் பணியாற்றியவர் வித்யா குல்கர்னி. இந்நிலையில், அவர் கடந்த நவம்பரில் மத்திய அரசு பணிக்குச் சென்றார். இதற்கிடையே அவரை சென்னை மண்டல சிபிஐ இணை இயக்குநராக நியமித்து மத்திய பணியாளர் தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவருடன் ஒடிசா காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி ஞான்சிஷியாம் உபாத்யா, மகாராஷ்டிரா காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி நாவல் பஜாஜ் ஆகியோரும் சிபிஐ இணை இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x