Published : 30 Dec 2021 07:11 AM
Last Updated : 30 Dec 2021 07:11 AM

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் 7 பேருக்கு கரோனா

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர்காயத்ரி கிருஷ்ணனின் முகாம் அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் இருந்தது. பின்னர் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து, வேறு சில ஊழியர்களுக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர், ஆட்சியரின் முகாம் அலுவலக ஊழியர்கள் என 16 பேருக்கு டிச.27-ல் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஊழியர்கள் 6 பேருக்கு தொற்று இருப்பது நேற்று முன்தினம் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவர்கள் 6 பேரும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

ஆட்சியரும், முகாம் அலுவலகத்தில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு, அவசியமான கோப்புகளை பார்வையிடுவது, கையெழுத்திடுவது போன்ற பணிகளை செய்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x