Published : 30 Dec 2021 09:02 AM
Last Updated : 30 Dec 2021 09:02 AM

வீட்டுக்குள் நிலவும் காற்று மாசை குறைக்கும் ‘இன்புளூம்ஸ்’ செடிகள்

கோவை

வீட்டுக்குள் வளரும் தாவரங்களுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள கோவையின் முதல் கடைஇன்புளூம்ஸ். சூழலியல் ஆர்வம்கொண்ட டாக்டர் வித்யா ராஜன்,கணினி பொறியாளர் அனிதா வடிவேல் ஆகியோரால் தொடங்கப்பட்டு இன்று பிரம்மாண்டமாக தனது சேவையை விரிவாக்கியுள்ளது இன்புளூம்ஸ்.

கோவை கணபதி, உதயா நகரில்உள்ள இன்புளூம்ஸ் பசுமைக்குடிலில், வீட்டின் உட்புறத்தை அலங்கரிக்கத் தேவையான நூற்றுக்கணக்கான செடிகள், கலைநயம் மிக்க பீங்கான் தொட்டிகள் உள்ளன. நாம் அன்றாடம் உபயோகிக்கும் ஏசி, ஃபிரிட்ஜ், பிரின்டர், பெயின்ட், தோல்பொருட்கள் ஆகியவை வெளியிடும் பென்சீன், டொலுவின், ஃபார்மால்டிஹைடு போன்றவற்றால் வீட்டுக்கு உள்ளேயும்காற்று மாசு ஏற்படுகிறது. எனவே, காற்றை தூய்மையாக்கும் செடிகளை நடுத்தர மக்களுக்கும் ஏற்ற விலையில் இங்கு விநியோகித்து வருகின்றனர்.

பிறந்தநாள், மணநாள், ரிட்டன் கிப்ட்ஸ், கார்ப்பரேட் கிப்ட்ஸ் ஆகியவையும் இங்குஉள்ளன. பல வண்ண தாவரங்களால் அலங்கரிக்கப்படும் டெர்ராரியம் மிகச்சிறந்த அன்பளிப்பாக கருதப்படுகிறது. 50 ரூபாய் முதல் இன்புளூம்ஸ்-ல்பரிசுத் தாவரங்கள் உள்ளன.

எனவே, வீட்டுக்குள் காற்றுமாசை குறைக்க பயன்படும் தாவரங்கள், பரிசுத் தாவரங்களை பெற 9360256257 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். புதுமனைகளுக்கு முழு இன்டோர் டெகரேசன், பால்கனி வடிவமைப்பு ஆகியவற்றையும் இன்புளூம்ஸில் மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x