Published : 30 Dec 2021 08:45 AM
Last Updated : 30 Dec 2021 08:45 AM

அம்மா உணவகத்தில் ஜெ. படம் அகற்றம்: கண்டித்து அதிமுகவினர் போராட்டம்

திருமங்கலத்தில் 2015-ம் ஆண்டு அம்மா உணவகம் அரசு மருத்து வமனை எதிரே தொடங்கப்பட்டது.

நேற்று காலை திருமங்கலம் அம்மா உணவகத்தில் பராமரிப்பு பணியின்போது ஜெயலலிதாவின் படத்தை அகற்றியதால் ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் அதிமு கவினர் நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசை கண்டித்து அம்மா உணவக வாயில் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஜெயலலிதாவின் படத்தை வைத்தால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என அதிமுகவினர் தெரிவித்தனர். இதையடுத்து புதிதாக ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டது. அதிமுகவினர் கலைந்துசென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x