Published : 30 Dec 2021 08:54 AM
Last Updated : 30 Dec 2021 08:54 AM

வலு தூக்கும் போட்டியில் எம்எல்ஏ சாதனை

சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ.ராஜா, வலு தூக்குவதிலும் வீரராவார். சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற மாநில அளவிலான பெஞ்ச் பிரஸ் வலுதூக்கும் போட்டியில் முதலிடம் பிடித்து, தேசிய அளவி லான போட்டிக்கு தகுதிபெற்றார். பின்னர், கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தார். இதன்மூலம் துருக்கியில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வானார்.

துருக்கியில் நேற்று நடைபெற்ற வலு தூக்கும் போட்டியில் 140 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர், ஆசிய அளவில் வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்று, சாதனை படைத்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x