Published : 11 Mar 2016 08:33 AM
Last Updated : 11 Mar 2016 08:33 AM

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

பூவிருந்தவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் திருவள்ரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சுந்தரவல்லி நேற்று ஆய்வு செய்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி கடந்த 2 நாட்களாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி ஆகிய தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளை திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அவர், பூவிருந்தவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை நேற்று ஆய்வு செய்தார்.

திருமழிசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பூவிருந்தவல்லி டி.பி.எம். நடுநிலைப் பள்ளி, காட்டுப்பாக்கம் எ.வி.எல் மெட்ரிக் பள்ளி, சென்னீர்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கண்ணப்பாளைம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அலுவலர் சுந்தரவல்லி, அந்த வாக்குச்சாவடிகளில் பாது காப்பான முறையில் தேர்தல் நடத்துவதற்காக உரிய ஏற்பாடு களை செய்ய அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

பூவிருந்தவல்லி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள திருமழிசை, காட்டுப்பாக்கம் உள் ளிட்ட இடங்களில் வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்தள அமைப்பு, குடிநீர் வசதி, கழிப் பறை வசதி, மின்சார வசதி ஆகிய அடிப்படை வசதிகள் செய்யப் பட்டுள்ளதா? என்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் பூவிருந்தவல்லி வட்டாட்சியருமான பத்மஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x