Published : 29 Dec 2021 06:39 AM
Last Updated : 29 Dec 2021 06:39 AM
சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
கட்டிடம், மண்பாண்டம், ஓட்டுநர், சலவைத் தொழிலாளர், முடிதிருத்துவோர் மீன் வியாபாரிகள், கைவினை பொருட்கள் விற்பனை செய்வோர். வீட்டுவேலை. கைத்தறி, விசைத்தறி, சிறு கடை வியாபாரிகள், இருளர், நரிக்குறவர், பிற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றி வரும்மத்திய அரசை கண்டித்தும், நரிக்குறவர்களை பழங்குடியினராக அறிவிக்க வேண்டும், மீனவர் விரோத மசோதாவை திரும்ப பெற வேண்டும், பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் நிதி உதவியைரூ.7 லட்சமாக உயர்த்தி தரவேண்டும், நல வாரியங்கள் மூலம் இஎஸ்ஐ மருத்துவ வசதியை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை சின்னமலை ராஜீவ் காந்தி சிலை அருகே இருந்துஆளுநர் மாளிகை நோக்கிஅமைப்புசாரா தொழிலாளர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT