Published : 29 Dec 2021 06:33 AM
Last Updated : 29 Dec 2021 06:33 AM

தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறி கீழே இறங்க மறுத்த கிராமவாசி

புதுவையை 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற, அம்மாநில அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இதற்காக வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோனேரிக்குப்பம் கிராமத்தில் சுகாதார ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தினர்.

அப்போது ஒரு வீட்டில், 40 வயது நபர் ஒருவர் தடுப்பூசி செலுத்தாதது தெரியவந்தது. அவர்சுகாதார ஊழியர்களை கண்டதும் மரத்தின் மேல் ஏறி அமர்ந்திருந்தார். அவரை தடுப்பூசி போட கீழே வரும்படி ஊழியர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவர், "தடுப்பூசி போட மாட்டேன்; உங்ககிட்ட சிக்க மாட்டேன்‘ எனக்கூறி. மரத்தின் மேலேயே இருந்து விட்டார். சுகாதாரத்துறை ஊழியர்கள் கெஞ்சியும் அவர் வரவில்லை. இந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x