Published : 29 Dec 2021 07:10 AM
Last Updated : 29 Dec 2021 07:10 AM
தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் 57-வது பிறந்த நாளை அக்கட்சியினர் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடினர். அனைத்து மாவட்டங்களிலும் தமாகா நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கோயில், கிறிஸ்தவ தேவாலயம், பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஜி.கே.வாசனுக்கு கடிதம் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுபோல, முக்கியப் பிரமுகர்கள் பலரும் நேரிலும், தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கேரள ஆளுநர் ஆரிப் முஹமதுகான், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், பிரகலாத் ஜோசி, எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஜி.கே.வாசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்று தமாகா தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT