Published : 28 Dec 2021 08:51 AM
Last Updated : 28 Dec 2021 08:51 AM

மதச்சார்பற்ற கூட்டணியை பலவீனப்படுத்த முயற்சி; பிரதமர் மோடியின் குரலாக மம்தா பேசுகிறார்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: மதச்சார்பற்ற கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடியின் குரலாக அவர் ஒலித்துவருகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான டி.யசோதா முதலாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவைகாங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் ஆ.கோபண்ணா, மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர் டி.யசோதா.

பாஜகவை வீழ்த்த வேண்டும்என்றால் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியால் மட்டுமே முடியும். ஆனால், மதச்சார்பற்ற கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடியின் குரலாக அவர் ஒலித்து வருகிறார். மற்ற மாநிலங்கள் இதில் தடுமாறியபோது தமிழகத்தில் மட்டும் மதச்சார்பற்ற கட்சிகள் பாஜக எதிர்ப்பில் உறுதியாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x