Published : 28 Dec 2021 01:15 PM
Last Updated : 28 Dec 2021 01:15 PM
திருவண்ணாமலை: எங்களது பிள்ளைகள் படிக்க பழங்குடியின ஜாதி சான்று வழங்க வேண்டும் என மலை குறவன் சமூகத்தினர் ஆட்சியர் பா.முருகேஷிடம் மனு கொடுத் துள்ளனர்.
தண்டராம்பட்டு அடுத்த தானிப் பாடி கிராமம் புதுத்தெருவில் வசிக்கும் செல்வம் தலைமையில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், “எங்கள் கிராமத்தில் மலை குறவன் சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பங்கள் வசிக்கின்றன. நாங்கள் படிக்கவில்லை என்றாலும் எங்களது பிள்ளைகள் படிக்க வேண்டும் என பழங்குடியினர் ஜாதி சான்று கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. பழங்குடியின ஜாதி சான்று மற்றும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
செய்யாறு அடுத்த திருமணி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூக மக்கள், ஆட்சியர் பா.முரு கேஷிடம் அளித்துள்ள மனுவில், “எங்களுக்கு 2008-ல் வீட்டு மனை வழங்கப்பட்டது. ஆனால், யாருக்கு எந்த இடத்தில் வீட்டு மனை என பிரித்து வழங்கவில்லை. இந்நிலையில், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தனிநபர் ஒருவர், தனது விவசாய நிலத்துடன் இணைத்து ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அளந்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத் துள்ளனர்.
தரமான விதை நெல் வழங்க வலியுறுத்தி உழவர் பேரவை சார்பில் ஆட்சியர் பா.முருகேஷிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. அப்போது உழவர் பேரவை மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் கூறும் போது, “தரமான விதை நெல் வழங்கவில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இது, வியாபாரிகளுக்கு துணை போவதாக சந்தேகம் எழுகிறது” என்றார். முன்னதாக, ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT