Published : 27 Dec 2021 12:07 PM
Last Updated : 27 Dec 2021 12:07 PM

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கலை அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனை யுமின்றி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கான பெற்றோரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, உதவித் தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையும், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தின் மின்னஞ்சல் முகவரியான dir-bcmw@nic.in, 044-29515942 என்றஎண்ணையும் தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x