Published : 27 Dec 2021 01:13 PM
Last Updated : 27 Dec 2021 01:13 PM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியால் கிராமத்தைக் கண்காணிக்க பெண் ஊராட்சித் தலைவர் தனது சொந்த செலவில் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளார்.
சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை ஊராட்சியில் மல்லாக்கோட்டை, சித்த மல்லிபட்டி, ஓடைப்பட்டி ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. சில வாரங்களுக்கு முன்பு ஓடைப்பட்டியில் இரவு நேரத்தில் 5 வீடுகளின் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனர். அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் போலீஸார் சிரமப்பட்டனர்.
இதையடுத்து ஓடைப்பட்டி கிராமத்தைக் கண்காணிக்கும் வகையில் ஊராட்சித்தலைவர் விஜயா தனது சொந்த செலவில் ரூ.95 ஆயிரம் மதிப்பில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார். ஏற்கெனவே இவர் மல்லாக்கோட்டை கிராமம் முழுவதும் 27 இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளார்.
மேலும் ஊராட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் ஒலி பெருக்கியும் அமைத்துள்ளார்.
இதுகுறித்து ஊராட்சித் தலை வர் விஜயா கூறுகையில், இ-சேவை உள் ளிட்ட அனைத்துச் சேவைகளிலும் எங்கள் ஊராட் சியை முன் மாதிரியாக மாற்றி வருகிறேன். கிராமத் தைக் கண்காணிக்க ஏற்கெனவே மல்லாக் கோட்டையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினேன். தற்போது ஓடைப் பட்டியிலும் அசம்பாவிதச் சம்பவம் நடந்ததால் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளேன் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT