Published : 27 Dec 2021 02:26 PM
Last Updated : 27 Dec 2021 02:26 PM
திருச்சி: தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ்தான். பிரதமர் நிலையில் மோடிக்கு மாற்று ராகுல்காந்திதான் என திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர் தெரிவித் துள்ளார்.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாசல மன்றத்தில் கிறிஸ்துமஸ் விழா நேற்று நடைபெற்றது. இதில், ஏழை- எளியோருக்கு திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர், வேட்டி- சேலை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களி டம் சு.திருநாவுக்கரசர் கூறியது:
திருச்சியைச் சுற்றியுள்ள பகுதி களைச் சேர்ந்த எம்பி-க்கள் அனை வரும் சேர்ந்து மத்திய விமானத் துறை அமைச்சரைச் சந்தித்து, திருச்சியில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என்று வற்புறுத்திய நிலையில், விரை வில் திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளது. திருச்சி வழியாக கூடுதல் ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அகில இந்திய அளவில் பாஜக-வுக்கு மாற்று காங்கிரஸ்தான். அதேவேளையில், மாநிலக் கட்சிக ளின் தலைவர்கள் பிரதமராக வர வேண்டும் என்று விருப்பப்படுவது தவறில்லை. ஆனால், பிரதமர் என்ற நிலையில் மோடிக்கு மாற்று ராகுல் காந்திதான். காங்கிரஸ் தலைமையில்தான் பாஜகவுக்கு எதிரான அணி அமையும். அதேபோல, மத்தியில் அடுத்து ராகுல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிதான் அமையும். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், வாழ்த்துவோம் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாவட் டத் தலைவர்கள் வி.ஜவஹர், பி.கோவிந்தராஜன், சிறுபான்மை யினர் அணி மாநில துணைத் தலைவர் அ.பேட்ரிக் ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்.ரெக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT