Published : 26 Dec 2021 04:22 PM
Last Updated : 26 Dec 2021 04:22 PM

68 மீனவர்களை விடுதலை செய்யும்வரை போராட்டம் தொடரும்; ஜனவரி 1-ல் ரயில் மறியல்: மீனவர் சங்கங்கள் அறிவிப்பு

ராமேஸ்வரத்தில் மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் | கோப்புப் படம்.

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 விடுதலைசெய்யும்வரை போராட்டம் தொடரும் எனவும் ஜனவரி 1ல் ரயில் மறியல் நடத்த உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 68 கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்ததிய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரியும் படகுகளை மீட்கக்கோரியும் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், புதுக்கோட்டை, உள்ளிட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகதலைவர்கள் பலரும் குரல்கொடுத்தும் ஒருவாரம் ஆகியும் இன்னமும் மீனவர்கள் விடுக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படாத நிலை மேலும் தொடர்வதால், அனைத்து மீனவர்களின் சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து அனைத்து மீனவர்கள் சங்கங்கள் ராமேஸ்வரத்தில் தெரிவித்ததாவது:

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்கள் விடுதலை செய்யக்கோரியும் 10 படகுகளை மீட்கக் கோரியும் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தமிழக அரசு சார்பில் தமிழக அரசின் பிரதிநிதிகள் குழு டெல்லியில் அதிகாரிகளை சந்தித்து மீனவர்களை விடுவிக்கக்கோரிக்கை வைக்க உள்ளநிலையில் அதன் பிறகு மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அறிந்த பின்னரே போராட்டம் கைவிடப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும். வருகின்ற 1ஆம் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தவும் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அனைத்து மீனவர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x