Published : 24 Dec 2021 12:34 PM
Last Updated : 24 Dec 2021 12:34 PM

நீலகிரி: நீட் தேர்வில் 2 முறை தோல்வியால் மாணவி தற்கொலை

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த ஓவேலியில் வசிக்கும் தம்பதி அருளானந்தம், புஷ்பா. இவர்களது 2-வது மகள் ஜெயா, கடந்த ஆண்டு நீட் தேர்வில் பங்கேற்று தோல்வி அடைந்தார். இருப்பினும் பெற்றோர் அளித்த ஊக்கத்தில், இந்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதியுள்ளார். அதிலும், தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

சோகத்தில் இருந்து வந்த அவர், தேயிலை செடிகளுக்குஅடிப்பதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை, நவ.18-ம் தேதி குடித்ததாக கூறப்படுகிறது. கூடலூர், உதகை மருத்துவமனைகளில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

நீட் தேர்வு தோல்வியால் மன உளைச்சலில் விஷம் குடித்துவிட்டேன், பெற்றோர் என்னை மன்னித்துவிடுங்கள் என ஜெயா எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x