Published : 24 Dec 2021 11:22 AM
Last Updated : 24 Dec 2021 11:22 AM

‘முக்கிய கட்டத்தில் கோடநாடு வழக்கு விசாரணை’

உதகை

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது.

இங்குள்ள பங்களாவுக்குள் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு, பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது. இந்த கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான், கனகராஜ் ஆகியோரை காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கார் விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

இதுதொடர்பாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, உதகையில் உள்ளமாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சயான்,வாளையாறு மனோஜ் ஆகிய இருவர் மட்டுமே ஆஜராகியிருந்தனர். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். கூடுதல் சாட்சிகளிடம் விசாரணை நடத்த அரசுத் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணையை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கூறும்போது, "கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்காவல்துறை விசாரணையில் இதுவரை 150சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை முக்கியகட்டத்தை எட்டியுள்ளது. தேவைப்பட்டால் கைது நடவடிக்கை இருக்கும்"என்றார். இந்நிலையில், ஜாமின் நிபந்தனைகளில் தளர்வு கோரி வாளையாறு மனோஜ் மனு தாக்கல் செய்தார். இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x