உயர் நீதிமன்ற ஆன்லைன் விசாரணையின்போது ஒழுங்கீனமாக செயல்பட்டதாக வழக்கறிஞர் மீது அவமதிப்பு வழக்கு: தொழில்புரிய தடை விதித்து பார் கவுன்சில் நடவடிக்கை

உயர் நீதிமன்ற ஆன்லைன் விசாரணையின்போது ஒழுங்கீனமாக செயல்பட்டதாக வழக்கறிஞர் மீது அவமதிப்பு வழக்கு: தொழில்புரிய தடை விதித்து பார் கவுன்சில் நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: உயர் நீதிமன்ற ஆன்லைன் விசாரணையின்போது இளம்பெண்ணுடன் ஒழுங்கீனமாக செயல்பட்ட வழக்கறிஞர் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது. அந்த வழக்கறிஞர் தொழில் புரிய தடை விதித்து பார் கவுன்சிலும் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் ஆன்லைன் மூலமாக காணொலி காட்சியில் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது வழக்கு விசாரணைக்காக ஆன்லைனில் காத்திருந்த வழக்கறிஞர் ஒருவர் திடீரென இளம்பெண் ஒருவருடன் ஒழுங்கீனமாக செயல்படும் வீடியோ காட்சி உயர் நீதிமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காணொலியில் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதியும், சக வழக்கறிஞர்களும் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்து விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவாமல் முடக்கவும், இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், இதுபோன்ற அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது எனவும், பார் கவுன்சிலும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த அந்த வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இதுதொடர்பான விசாரணை முடியும் வரை அவர் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகக்கூடாது என்றும், வழக்கறிஞராக தொழில் புரியக்கூடாது என்றும் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in