Published : 29 Mar 2016 07:33 PM
Last Updated : 29 Mar 2016 07:33 PM
உடுமலையில் சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு அரசு வேலை வழங்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் புனியா பரிந்துரை செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் கலப்புத் திருமணம் செய்த காரணத்துக்காக கடந்த 13-ம் தேதி சங்கர் படுகொலை செய்யப்பட்டார்
சங்கர் கொலை செய்யப்பட்ட போது பலத்த காயமடைந்த கவுசல்யா கோவை அரசு மருத்துவ மனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது தலையில் ஏற்பட்ட காயத்துக்கு 36 தையல்கள் போடப்பட்டன. சிகிச்சை முடிந்த நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது, சங்கரின் தந்தை மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது, சங்கரின் வீட்டுக்குச் செல்ல விரும்புவதாக கவுசல்யா தெரிவித்ததை அடுத்து, போலீஸார் சங்கரின் தந்தை வேலுச்சாமியுடன் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு அரசு வேலை வழங்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் புனியா பரிந்துரை செய்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்த கவுசல்யா, ''இனியும் சாதி ஆணவப் படுகொலை நடக்காத அளவுக்கு சட்டம் கொண்டு வரவேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT