Published : 21 Mar 2016 09:02 AM
Last Updated : 21 Mar 2016 09:02 AM

மக்களை அடிமையாக்க முயற்சி ராமதாஸ் குற்றச்சாட்டு

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தை ஆண்ட இரண்டு கட்சிகளும் கடந்த 10 ஆண்டுகளாக ரூ.70 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளன. 46 ஆண்டுகளாக மதுக்கடைகளை திறந்து மக்களை குடிகாரர்களாக ஆக்கியுள்ளன.

திமுகவும், அதிமுகவும் வாக்குகளுக்கு தேர்தலுக்கு தேர்தல் விலை நிர்ணயம் செய்கிறார்கள். வாக்காளர்களை அடிமையாக வைக்க முயற்சிக்கிறார்கள்.

தேர்தலுக்கு முன் பணமும், தேர்தலுக்கு பின் தேவையற்ற இலவசமும் கொடுத்து அடிமையாக வைத்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும், ஆந்திரா மூன்றாமிடத்திலும் உள்ளது.

80 சதவீத கல்லூரி மாணவர்கள் அடுத்த முதல்வராக அன்புமணி வர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் அன்புமணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x