வங்கக் கடலில் இன்று உருவாகிறது: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் இன்று உருவாகிறது: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

Published on

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வடகிழக்கு பருவக் காற்று காரணமாக 18-ம் தேதி தென் கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும்.

19-ம் தேதி வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்க கடல் மற்றும்அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இதன் காரணமாக 18, 19-ம் தேதிகளில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும்.

20-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in