Published : 31 Mar 2016 09:22 AM
Last Updated : 31 Mar 2016 09:22 AM
திருச்சியில் நேற்று நடைபெற்ற பாமக கலந்துரையாடல் கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி பேசியது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 4 முதல்வர் வேட்பாளர்கள் உள்ளனர். ஒருவர் எழுந்திரிக்க முடியாதவர், மற்றொருவர் நடக்க முடியாதவர், 3-வது நபர் நிலையாக நிற்க முடியாதவர். இவர்களால், அவர்களது தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில், எப்படி மக்களுக்காக பணியாற்ற முடியும். ஆனால், 4-வது நபரான நான் ஓடியாடி பணியாற்றுவேன். எனக்கு வாய்ப்பளித்தால், திருச்சியை தமிழகத்தின் 2-வது தலைநகராக கொண்டு வர பரிசீலனை செய்வேன். கூட்டணிக்கு தமாகா வந்தால் பரிசீலனை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT