Published : 07 Mar 2016 08:55 AM
Last Updated : 07 Mar 2016 08:55 AM
ராஜீவ்காந்தி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் போனில் பேசிய நபர், “சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையிலும் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் அவை வெடிக்கும். முடிந்தால் தடுத்துப்பாருங்கள்” என்று மிரட்டியுள்ளார். அவர் தொடர்ச்சியாக இதேபோன்று 3 முறை போன் செய்து மிரட்டியுள்ளார்.
வெடிகுண்டு சோதனை
இதைத் தொடர்ந்து போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் மோப்ப நாய்களுடன் இரு மருத்துவமனைகளுக்கும் விரைந்து சென்றனர். அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். மருத்துவமனைக்கு வந்தவர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் சந்தேகப்படும் விதத்தில் எதுவும் சிக்கவில்லை. அதைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் சென்னையில் இருந்து பேசியிருக்கிறார். அவரை பிடிக்கும் முயற்சியில் சென்னை மாநகர போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT