Published : 24 Mar 2016 08:41 PM
Last Updated : 24 Mar 2016 08:41 PM

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தூய ஆட்சி முறையைக் கொண்டுவருவோம்: சீமான்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தூய ஆட்சி முறையைக் கொண்டுவருவோம் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை சீமான் வெளியிட்டார்.

அதற்குப் பிறகுசெய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மக்கள் அனுபவித்து வந்த துயரங்களைத் துடைத்து எறிவதற்காக ஒரு மாற்று வரைவுதான் இந்த தேர்தல் அறிக்கை. தீய ஆட்சி முறையை ஒழித்து, தூய ஆட்சி முறையை மலரச் செய்ய வேண்டும்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழல், லஞ்சம், பசி, பஞ்சம், பட்டினி, சாதிய இழிவு, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மது, அடக்குமுறை, ஒடுக்குமுறை போன்ற இவை ஏதுமற்ற ஒரு தூய ஆட்சி முறையைக் கொண்டு வருவோம்.

இவ்வாறு சீமான் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x