Last Updated : 16 Mar, 2016 09:19 AM

 

Published : 16 Mar 2016 09:19 AM
Last Updated : 16 Mar 2016 09:19 AM

பாஜகவுடன் கூட்டணி இல்லை: தேர்தலில் பாமக தனித்தே போட்டி - ஏப்ரல் முதல் வாரத்தில் வேட்பாளர் பட்டியல்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளி லும் பாமக தனித்து போட்டியிடுகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டே சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை தொடங்கிய பாமக, முதல்வர் வேட்பாளராக அன்பு மணியை அறிவித்தது. தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகள் கூட்ட ணிக்கு வரலாம் எனவும் தெரிவித்தது. மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு கடந்த ஜனவரியிலேயே கட்சியி னரிடம் விருப்ப மனுக்களை பெற்று நேர்காணலும் நடத்தி முடிக்கப்பட்டது.

வண்டலூரில் பாமக மாநில மாநாடு முடிந்தவுடன் மற்ற கட்சி களுக்கு முன்பாக தேர்தல் அறிக் கையும், வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். ஆனால், மாநாடு முடிந்து 3 வாரங்கள் ஆகியும் இதுவரை தேர்தல் அறிக்கையோ, வேட்பாளர் பட்டியலோ வெளியிடவில்லை.

கடந்த வாரம் அன்புமணி ராம தாஸ் அளித்த பேட்டியில், ‘பாமக வின் தேர்தல் அறிக்கை முதலில் வெளியிடப்படும். மற்ற கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு பாமக வேட்பாளர் பட்டியலை வெளியிடும்’ என்று தெரிவித்திருந்தார். பாஜகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதனால்தான் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஏற் பட்டுள்ளது என்று தகவல்கள் வெளி யாகின.

இதுதொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, “கட்சி யின் தேர்தல் அறிக்கை இந்த மாத இறுதியில் வெளியிடப்படும். வேட் பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. அதனால் தான் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 3 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.

வேட்பாளர் பட்டியலில் இளை ஞர்கள், பெண்களுக்கு முக்கியத் துவம் கொடுக்கப்படும். பாஜகவுடன் கூட்டணி இல்லை. பாமக எந்த கட்சிகளுடனும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை. 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி யிடுகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x