Published : 27 Mar 2016 11:21 AM
Last Updated : 27 Mar 2016 11:21 AM

‘கேஜ்ரிவாலை போல விஜயகாந்துக்கும் வெற்றி’: பிரேமலதா விஜயகாந்த்

டெல்லியில் கேஜ்ரிவாலுக்கு மக்கள் ஆதரவு அளித்ததுபோல் தமிழகத்தில் விஜயகாந்துக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் பலமுனைப் போட்டி உருவாகியுள்ளது. இது ஆரோக்கியமான போட்டி. தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களும் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி இணைந்த விஜயகாந்த் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். டெல்லியில் கேஜ்ரிவாலுக்கு மக்கள் ஆதரவு அளித்ததுபோல் தமிழகத்தில் விஜயகாந்துக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள். திமுக, அதிமுக ஆட்சிகளில் தமிழகம் வளர்ச்சி அடையவில்லை. இரு கட்சிகளுமே இலவசங்களை மட்டுமே வழங்கியுள்ளன. தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புகள் உள்ளன. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எங்கள் கூட்டணியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டபின் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்வார். தேமுதிக சார்பில் பெண்கள் மற்றும் தன்னிறைவுத் திட்டம் தொடர்பாக மேலும் 2 தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்படவுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x